குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கேரளாவில் 36 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 36 மணி நேரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:14 pm

IANS


திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 36 மணி நேரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கிய கன மழை வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவனந்தபுரம் செல்லும் மங்களூர் விரைவு ரயில் பெட்டி மீது மரம் ஒன்று வேறோடு சாய்ந்ததில் ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துவிட்டன. இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், கொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.