பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை: சுவாமி கிண்டல் 

குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :16 ஜூலை 2018, 11:48 am

புது தில்லி: குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் விழா ஒன்றில் பேசும் பொழுது, "தான் கர்நாடக முதல்வர் ஆனதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கர்நாடக மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், முன்னாள் பிரதமரான எனது தந்தையின் நிறைவேறாத செயல்திட்டங்களை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். ஆனால் ஒரு கூட்டணி அரசின் வலி என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.    கடவுள் சிவன் போன்று அந்த வலியினை நான் விழுங்கியுள்ளேன்" என்று கண்ணீர் மல்க பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குமாரசாமி ரொம்ப நாட்களுக்கு சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் பதவியின் சுமை குறித்த குமாரசாமியின் பேச்சினை சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

மாநில முதல்வராக வேண்டும் என்ற குமாரசாமியின் கனவு நிறைவேறி விட்டது. ஆனால் ரொம்ப நாட்களுக்கு அவர் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நிலை சீக்கிரம் மாறி சிக்கல்கள் எல்லாம் தீரும். அமித் ஷா என்னை கர்நாடகத்த்திற்குச் சென்று ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபடச் சொன்னால், மகிழ்ச்சியாகச் செய்வேன்.

இதர எதிர்கட்சிகள் யாரும் அத்துடன் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் இப்பொழுது தவிப்புடன் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒரு நாள் கோவில்களுக்குச் செல்கிறார்கள்; மறுநாள் இஸ்லாமியர்களைச் சந்தித்து ஆதரிக்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறாரகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.