பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்: நிதீஷ் குமார்

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஜூலை 2018, 1:04 pm

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது:

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான தேவையில்லை என்று கூறி 14-ஆவது நிதி ஆணைய கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. எனவே 15-ஆவது நிதி ஆணைய கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். 

இதற்காக பிகாரில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அனைவரும் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முக்கியத் தலைவர் அஷோக் சௌத்ரி தலைமையிலான அக்கட்சியின் 6 பேர் கொண்ட குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பான ஆலோசனைக்கு  அவரும் நேர்மறையாக பிரதிபலித்ததாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.