பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நவாஸ் ஷெரீஃப் கைதுக்கு அவருடைய நண்பர் பிரதமர் மோடியின் கருத்து என்ன? ட்விட்டரில் காங்கிரஸ் கேள்வி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவருடைய நண்பர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் ட்விட்டரில் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2018, 12:17 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவருடைய நண்பர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் ட்விட்டரில் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும், இருநாடுகளின் உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் சென்றிருந்தார். மேலும் ஷெரீஃப்-இன் பேத்தி திருமண நிச்சயத்திலும் கலந்துகொண்டார். இதுவே மோடியின் முதல் பாகிஸ்தான் பயணமாகும்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டி சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனர். இதுகுறித்து நவாஸ் ஷெரீஃப்-இன் நண்பர், பிரதமர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.