பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிரியங்கா சோப்ராவை டேக் செய்த காங்கிரஸ்: ட்விட்டரில் கலகலப்பு

செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரிங்கா சோப்ராவை காங்கிரஸ் டேக் செய்தது ட்விட்டரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2018, 9:17 am

செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரிங்கா சோப்ராவை காங்கிரஸ் டேக் செய்தது ட்விட்டரில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் விதமாக மண் பரிசோதனைக் கூடங்கள் அமைத்து அதில் இயற்கையாகவும், எளிமையாகவும் விளையும் பயிர்கள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, திட்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் வலைதளத்தில், மண் பரிசோதனைத் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, பொய் கூறுகிறார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் இதுபோன்ற 1,141 மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பதிவிட்டிருந்தது. 

ஆனால், இந்த பதிவில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதிக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை டேக் செய்தது. பின்னர் இந்தப் பதிவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது பெரும்பாலான ட்விட்டர் பயனாளர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.