பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ரூ.59 கோடி வருவாய்!

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் ரூ.59.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2018, 5:29 am

டிக்கெட் எடுக்காத பயணிகளால் மத்திய ரயில்வேக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் ரூ.59.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஜூன் மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் மேற்கொண்டவர்கள் மீது 3.26 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இவற்றின் மூலம் அபராதத் தொகையாக ரூ. 17.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுவே ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 10 லட்சத்து 85 ஆயிரம் பேர் மீது டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட விதிமீறல் குற்றச் செயல்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவற்றின் மூலம் மட்டும் இக்காலகட்டத்தில் மத்திய ரயில்வேக்கு ரூ.59 கோடியே 36 லட்சம் ரூபாய் அபராதத் தொகை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு நபர்கள் பெயரில் பயணச்சீட்டு பதிவு செய்து பயணம் செய்தவர்களால் ஜூன் மாதம் மட்டும் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் ரூ.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.