டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

என் கட்சியை உடைக்க நினைத்தால்..: பாஜகவை எச்சரித்த மெஹபூபா முஃப்தி 

மக்கள் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் இடையூறு செய்ய நினைத்தால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:13 pm

UNI

ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் இடையூறு செய்ய நினைத்தால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக அரசின் சார்பில் விழா ஒன்று வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசானது 1987-ஆம் ஆண்டில் செய்தது போன்று காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை பறிக்க எண்ணினாலோ, அல்லது இப்போது செய்வது போன்று மக்கள் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் இடையூறு செய்ய நினைத்தாலோ, 87-இல் சலாஹுதீன் மற்றும் யசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானது போல, மோசமான பின்விளைவுகள் ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.