வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கின்னஸ் அமைப்புக்கு கோவா காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரின் இந்த பயணங்கள் எதிர்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கோவா மாநில காங்கிரஸ், இதில் புது விதமான எதிர்ப்பை முன்வைத்துள்ளது. அவ்வகையில், வெளிநாடு சுற்றுப்பயணங்களில் சாதனைப் படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கின்னஸ் அமைப்புக்கு கோவா காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கல்ப் அமோன்கர், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலகிலேயே வேறு எந்த பிரதமரும் செய்யாத சாதனையை இந்திய பிரதமர் மோடி செய்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் அவர் புது சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் எதிர்கால சந்ததிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். எனவே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பரிந்துரைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய பொருளாதாரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அவர் செலவு செய்துள்ளது ரூ.355 கோடி ஆகும் என்று கின்னஸ் அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளோம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.03-க்கு சரிந்த போதும், எதுகுறித்தும் கவலைப்படாத பிரதமர், இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக நேரம் செலவிட்டுள்ளார். எனவே அவருடைய கேலிக்கூத்தான செயலை வெளிக்காட்டும் விதமாகவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


