மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் சப்ளை: புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல்

வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:09 pm

IANS

புதுதில்லி: வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டில் சப்ளை செய்யும் திட்டத்தினை செயல்படுத்த தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு முயற்சித்து வந்தது.ஆனால் மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் மற்றும் மத்திய அரசிடம் இருந்து இதற்கான உரிய ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கடும் மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில் வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை மாநில உணவுத்துறை மூலம் நேரடியாக சப்ளை செய்யும் புதிய திட்டத்திற்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிலேயே சப்ளை செய்யும் திட்டதிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்கான அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்த்தே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நடைமுறை தொடர்பாக தினமும் எனக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மோதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல்வர் கேஜரிவால் ஆளுநர் பைஜாலை வெள்ளி மாலை 3 மணிக்கு சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.