தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2017ல் பெங்களூருவில் தினமும் சராசரியாக 5 பேர் தற்கொலை: புள்ளி விவரம்

2017ம் ஆண்டில், பெங்களூருவில் தினமும் சராசரியாக 5 பேர் தற்கொலை செய்த கொண்டிருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2018, 11:13 am

பெங்களூர்: 2017ம் ஆண்டில், பெங்களூருவில் தினமும் சராசரியாக 5 பேர் தற்கொலை செய்த கொண்டிருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும், அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 1,921 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 1,268 பேர் ஆண்கள், 653 பேர் பெண்கள். 2016ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,795 ஆகவும், 2015ல் 1,855 ஆகவும் இருந்துள்ளது. 

யுவா உதவி மையத்தில் கவுன்சிலராக பணியாற்றும் ஹர்ஷிதா கூறுகையில், ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 தொலைபேசி அழைப்புகள் வரும். மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் நம்பிக்கைக் கொடுத்து அவர்களது எண்ணத்தில் இருந்து மாற்றுவோம். அதில் பதின்மவயதினரே அதிகம். கல்வியில் தோற்றவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதவர்களே அதிகம் என்கிறார்.

எந்த வயதினர் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மருத்துவர் மகேஷ் ஆர் கௌடாவிடம் கேட்டதற்கு, 25 முதல் 65 வயதுடையவர்கள்தான் பொதுவாக தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால், தற்போது 14 வயது சிறார்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானோரின் பிரச்னையாக, மனநலப் பிரச்னையே உள்ளது. மன அழுத்தம் அல்லது ஏதேனும் ஒரு விஷயத்துக்கு அடிமையாக இருப்பது போன்றவையும் காரணங்களாக அமைந்து விடுகின்றன என்கிறார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களா என்பதை அறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களே அதிகம் என்றும், அதில் 1,617 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.