இந்த தகவல்களை எல்லாம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நிக்லஸ் சாமுவேல் குகெர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் , 'தான் இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளின் சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும் அவர் இரு நாட்டு அரசாங்கங்களின் ஆதரவுடன் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தன்னைப் பெற்ற தயாரான அனுசுயாவினை கண்டு பிடிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ள அவர், தனது மகளுக்கு அனுசுயா என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.