2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தில் வாள் வீச்சு: எதிர்பாராமல் மரணமடைந்த சிறுவன்! 

நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தின் போது நடந்த வாள் வீச்சில், எதிர்பாராமல் வாள் பட்டு சிறுவன்  மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:56 am

IANS

ஹைதராபாத்: நிச்சயதார்த்த நிகழ்வு நடனத்தின் போது நடந்த வாள் வீச்சில், எதிர்பாராமல் வாள் பட்டு சிறுவன்  மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் ராய்துர்காம் பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கடந்த 5-ஆம் தேதி அன்று ஹமீத் என்ற சிறுவனின் வீட்டில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அப்பொழுது இளைஞர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து நடனமாடியுள்ளனர். அவர்களுடம் ஹமீதும் நடனமாடியுள்ளான்.

அப்பொழுது ஜூனாயத் என்ற வாலிபர் வாள் ஒன்றை எடுத்து காற்றில் சுழற்றி நடனமாடியுள்ளார். அப்பொழுது எதிர்பாராமல் வாள் பட்டதில்  சிறுவன் ஹமீது காயமடைந்தான். உடனடியாக அவனை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹமீத் 6-ஆம் தேதி மரணமடைந்து விட்டான்

இதனை அடுத்து ஜூனாயத் மீது இபிகோ பிரிவு 304 பிரிவு இரண்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.