பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

7 வங்கிகளில் ரூ. 3,695 கோடி கடன்: ரோட்டோமேக் எஃப்ஐஆர் விவரம் வெளியீடு

ரூ. 3,695 கோடிக்கு ரோட்டோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி கடன் தொகை நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. மொத்த விவரங்கள் தொடர்பான எஃப்ஐஆர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:17 pm

Raghavendran

அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ.800 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ரோட்டோமேக் நிறுவனத்தின் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டார்.

ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாதது தொடர்பாக சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, விக்ரம் கோத்தாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

முன்னதாக, ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் தலைமறைவானதாக செய்தி வெளியானது.

இதனை மறுத்த கோத்தாரி, ரூ.800 கோடி விவகாரம் என்பது மோசடியல்ல. நான் எங்கும் ஓடிவிடவில்லை. நான் ஒரு இந்திய பிரஜை. என் நாட்டின் மீது பற்று கொண்டவன். 

நான் கடனை திருப்பிச் செலுத்தாதவன் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. என் நிறுவனத்தை லாபம் ஈட்டாத நிறுவனம் என்றே அறிவித்துள்ளன. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. நான் தொடர்ந்து வங்கிகளுடன் பேசி வருகிறேன். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். கடன்களை நிச்சயம் திருப்பி செலுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ரோட்டோமேக் நிறுவனம் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்ற எஃப்ஐஆர் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ. 3,695 கோடிக்கு ரோட்டோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி பெற்ற கடன் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 

வங்கி வாரியாக ரோட்டோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி கடன் பெற்ற தொகையின் விவரம்:

  • பேங்க் ஆஃப் இந்தியா - 754.77 கோடி
  • பேங்க் ஆஃப் பரோடா - 456.63 கோடி
  • இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி - 771.07 கோடி
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 458.95 கோடி
  • அலகாபாத் வங்கி - 330.68 கோடி
  • பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா - 49.82 கோடி
  • ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் - 97.47 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.