அப்போது வழக்கம்போல் தனது சுயலாபத்துக்காக காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஊழல் முறையை கட்டவிழ்த்துள்ளது. ஆனால் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மறைக்கத் தொடங்கியது. ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. எனவே தங்கள் மீதான குற்றத்தை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தற்போது பழியை பாஜக மீது திருப்பியுள்ளது. தொடர்ச்சியாக பொய் கூறி மக்களை திசை திருப்பும் செயல்களை காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் மீதான இந்த ஊழல் மோசடிகளின் உண்மை தன்மையை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டது.