2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ட்விட்டரில் ராகுல் வாழ்த்து

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

Raghavendran

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஜனவரி 29-ந் இடைத்தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் மற்றும் அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ராஜஸ்தான் மாநிலத்தின் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது.

மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சக்தி சிங் ஹடா தாகர் 57,170 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகர் 70,146 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அஜ்மீர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3,13,706 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகு ஷர்மா 3,91,754 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதுபோல அல்வர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் யாதவை விட காங்கிரஸ் வேட்பாளர் கரண் சிங் யாதவ் 1,56,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ராஜஸ்தான் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றிபெற வைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் ஒவ்வொருவரின் செயலும் என்னை பெருமைப்பட வைக்கிறது. ராஜஸ்தான் மாநில மக்கள் பாஜக-வை புறக்கணித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.