புவனேஷ்வர்: மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான அதிக அழுத்தம் கொண்ட பம்புகளும், ஒடிசாவைச் சேர்ந்த 20 தீயணைப்புப் படை வீரர்களுடன் இந்திய விமானப் படையின் விமானம் விரைந்துள்ளது.
மேகாலயாவில் சுரங்க விபத்து நேரிட்டு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 2 வார காலத்துக்கும் மேல் ஆன நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து சிறப்பு தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.
இவர்கள் மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை உடன் கொண்டு சென்றிருப்பதால், உடனடியாக சுரங்க வாயிலை மூடியுள்ள நீரை வெளியேற்றி மீட்புப் பணியை துரிதப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

