ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கோச்சிங் வகுப்புகளா? கொலைக்களங்களா? இந்த ஆண்டின் பகீர் புள்ளி விவரம்

முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளும், அதற்கான பயிற்சி வகுப்புகளும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும் அதை மாற்ற எந்த அரசும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

News image
Updated On :27 டிசம்பர் 2018, 7:02 am

முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளும், அதற்கான பயிற்சி வகுப்புகளும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும் அதை மாற்ற எந்த அரசும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

மாடுகளுக்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கும், கோழிகளுக்கு மருந்து மூலம் முட்டை போட வைப்பதற்கும், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்தியாவின் கோச்சிங் வகுப்புகளுக்கான தலைநகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் மட்டும், இந்த ஆண்டு இதுவரை 19 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் ராஜஸ்தான் செல்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தானில் மட்டும் கடந்த 2016ம் ஆண்டு 17 பேரும்,  2017ல் 7 மாணவ, மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருவது, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மீதும், நுழைவுத் தேர்வுகள் மீதும் பல சந்தேகங்களையும், புகார்கைளயும் எழுப்புகிறது.

கடந்த 4 நாட்களில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதுதான், இந்த புள்ளி விவரங்களை நம்மைத் தேட வைத்துள்ளது. கடைசியாக ஐஐடியில் சேர கடந்த 3 ஆண்டுகளாக கோச்சிங் சென்று வந்த பிகார் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் அனைவரது தற்கொலைக்கும் ஒரே காரணம்தான்.. நுழைவுத் தேர்வில் சாதிக்க முடியாதோ, பெற்றோரின் கனவை நனவாக்க முடியாதோ என்ற அச்சமே இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் எத்தனை அனிதாக்களைத்தான் இன்னமும் காவு வாங்க காத்திருக்கிறதோ? 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.