ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 டிசம்பர் 2018, 5:49 am


புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரித்தாக்கலை எளிமைபடுத்துவது, 99 சதவிகிதப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 18 சதவீத வரியை விதிப்பது உள்ளிட்ட விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

நாடு முழுவதிலும் ஒரேமாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.  இதில், ஏற்கெனவே அமலில் இருந்த பலமுனை வரிகள் நீக்கப்பட்டு 5, 12, 18, 28 என்ற நான்கு விதமான படிநிலைகளில் வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரி விதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மேலும் எளிதாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், அதிகபட்ச வரி விதிப்பான 28 சதவீதத்தில் இருக்கும் பல்வேறு பொருள்கள் 18 சதவீத வரி வரம்புக்குள்ளும், 18 சதவீதத்தில் இருக்கும் சில பொருள்கள் 12 சதவீத வரி வரம்புக்குள்ளும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.