மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:57 pm

ANI


புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரித்தாக்கலை எளிமைபடுத்துவது, 99 சதவிகிதப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 18 சதவீத வரியை விதிப்பது உள்ளிட்ட விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

நாடு முழுவதிலும் ஒரேமாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.  இதில், ஏற்கெனவே அமலில் இருந்த பலமுனை வரிகள் நீக்கப்பட்டு 5, 12, 18, 28 என்ற நான்கு விதமான படிநிலைகளில் வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரி விதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மேலும் எளிதாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், அதிகபட்ச வரி விதிப்பான 28 சதவீதத்தில் இருக்கும் பல்வேறு பொருள்கள் 18 சதவீத வரி வரம்புக்குள்ளும், 18 சதவீதத்தில் இருக்கும் சில பொருள்கள் 12 சதவீத வரி வரம்புக்குள்ளும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.