ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மோடி இடத்தில் நானா? வாய்ப்பே இல்லை என்கிறார் இவர்!

இல்லை, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2018, 5:30 am


புது தில்லி: இல்லை, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில அரசு நிர்வாகம் ஒன்று ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிய கடிதத்தில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்கிவிட்டு, அப்பதவிக்கான வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செய்தியாளர்களிடம் கேட்டதற்குதான் மேற்கண்ட பதிலை அவர் கூறியுள்ளார்.

அதாவது, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கங்கைப் பணியை முதலில் முடிக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகளை கட்டமைக்க வேண்டும், சார் தாம் பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும், இன்னும் இதரப் பணிகள் உள்ளன. இப்பணிகளை செய்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை செய்து முடிக்க வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது பிரம்மபுத்திரா நதியின் மீது 6 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதே போல, நீர்வழிப் பாதைகளையும் 5 நட்சத்திர மற்றும் 7 நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.