திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பெய்ட்டி புயல் பாதிப்பு: விஜயவாடாவில் மேலும் 4 பேர் சாவு

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. 

News image
Updated On :19 டிசம்பர் 2018, 8:58 am

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. 

பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலும் பயங்கர வேகத்தில் காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெய்ட்டி புயல் பாதிப்பு காரணமாக விஜயவாடா மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை மேலும் 4-ஆக அதிகரித்தது. நிலத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரை சீர்செய்ய சென்ற விவசாயி, சாலையில் விழுந்திருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கடுங்குளிர் காரணமாக இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.