ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது.
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலும் பயங்கர வேகத்தில் காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெய்ட்டி புயல் பாதிப்பு காரணமாக விஜயவாடா மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை மேலும் 4-ஆக அதிகரித்தது. நிலத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரை சீர்செய்ய சென்ற விவசாயி, சாலையில் விழுந்திருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கடுங்குளிர் காரணமாக இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

வாசிப்புதான் வாழ்வின் ஆதாரம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

ஆறுமுகனேரி பேரூராட்சி அவசரக் கூட்டம்

ரூ.1,975 கோடியில் முக்கிய 3 மேம்பாலங்கள் திறப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

