புது தில்லி: தில்லியில் உள்ள சில பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சில புதிய கேள்விகளை இணைத்துள்ளன.
முதன் முதலில் அந்த விண்ணப்பங்களைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்று தூக்கிவாறிப்போடலாம். சரி வாருங்கள் அப்படி என்னதான் கேட்கிறார்கள் என்று பார்க்கலாம்.
அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், பொருளாதார நிலையில் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று தில்லி அரசு அறிவித்ததை அடுத்து, இந்த புதிய விண்ணப்பங்கள் தயாராகியுள்ளன.
அதன் அடிப்படையில், பிள்ளைகளின் பெற்றோர் அசைவமா? சைவமா? புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களா? குடிப்பழக்கம் இருக்கிறதா? குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அழைத்து வந்து, அழைத்துச் செல்வீர்கள்? என்பது போன்ற கேள்விகள் விண்ணப்பங்களில் புதிதாக முளைத்துள்ளன.
இது மிகவும் தேவையற்ற கேள்வி என்றும், சரியான முறை அல்ல என்றும் தில்லி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை பகிரங்கமாகவே செய்யும் தில்லி பள்ளிகள், ஒவ்வொரு கேள்விக்கும் தலா 5 மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.
சில பள்ளிகள், தங்களது பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்களை வழங்குவதையும் சட்டவிரோதம் என்று குறிப்பிடுகிறது தில்லி கல்வித் துறை.
பெற்றோர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், பான் அட்டை விவரம், ஆண்டு வருமானம் போன்ற விவரங்களை பள்ளிகள் கேட்பது தவறானது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டை கட்டாயம் என்ற பள்ளி நிர்வாகங்களின் உத்தரவுக்கு எதிராகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


