/

மாட்டிறைச்சி ட்வீட்: பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவுக்கு மிரட்டல்

மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா ட்வீட் செய்தது தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2018, 12:21 pm

மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா ட்வீட் செய்தது தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவா சுற்றுலா சென்ற அவர், அங்கு பாஜக ஆட்சி நடப்பதால் மாட்டிறைச்சியுடன் மதிய உணவு எடுத்துக்கொண்டதாக முதலில் ட்வீட் செய்தார். பின்னர் அதன் ருசி சரியில்லை என்று கூறி அப்பதிவை ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். 

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தொலைபேசி எண் ஒன்றை குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் செய்தார். ஆனால், அதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை. எனவே, இதை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.