மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

உர்ஜித் படேல் முடிவை மத்திய அரசு மதிக்கிறது: அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மற்றும் ஆளுநராக உர்ஜித் படேல் திறம்பட செயல்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:51 pm

ANI

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், 

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் மற்றும் ஆளுநராக உர்ஜித் படேல் திறம்பட செயல்பட்டுள்ளார். அவரின் இந்த உணர்வுப்பூர்வமான முடிவை மத்திய அரசு மதிக்கிறது. உர்ஜித் படேலுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், பொதுச் சேவையில் மேலும் ஈடுபடவும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அதுபோன்று, விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக கூறியதாவது, 

இந்தியாவுக்கு இது மிகச்சிறப்பான நாள். இந்தியாவில் ஊழல் செய்துவிட்டு யாராலும் தப்பிக்க முடியாது. பிரிட்டன் நீதிமன்றத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது ஊழல் செய்து தப்பித்த ஒருவர் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பிடிக்கப்படுகிறார்.

இது நேர்மைக்கும், தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி. இந்திய மக்கள், பொருளாதாரம் ஆகியவற்றை ஏமாற்றிவிட்டு இவ்வுலகில் எங்கு வேண்டுமென்றாலும் சுதந்திரமாக இருந்துகொண்டு இந்திய அரசால் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.