ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்துள்ளார்: ராகுல்

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2018, 2:55 pm

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

எதிர்கட்சிகளின் கூட்டத்தின் மத்தியில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்தது தெரியவந்தது. ஏனெனில் இனியும் அவரால் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பாதுகாத்து வந்த காரணத்தால் தான் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. மத்திய அரசு தனது சொந்த தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியை தன்வசப்படுத்த நினைப்பது தேச விரோத நடவடிக்கை ஆகும். தற்போது மத்திய அரசின் இந்த சர்வாதிகார முறைக்கு பலர் இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது எனக்கு பெருமையாக உள்ளது.

இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளான ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தற்போதைய பாஜக ஆட்சியால் சீரழிந்து வருகின்றன. எனவே அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.