தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கொச்சியில் மெட்ரோ சேவையும் நிறுத்தம்

மெட்ரோ ரயில் இயக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:31 pm

ENS

மெட்ரோ ரயில் இயக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அந்த மாநிலம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 39 அணைகளில் 33 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை 73 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆலுவா நகரம் அதிகளவு பாதிக்கப்பட்டு மற்ற இடங்களில் இருந்து தனிமையாக்கப்பட்டது. 

கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில்களை இயக்கும் கட்டுப்பாட்டு மையம் ஆலுவா நகரத்தின் அருகே உள்ள முட்டம்யார்ட் பகுதியில் அமைந்துள்ளது. அந்த கட்டுப்பாட்டு மையத்திலும் வியாழக்கிழமை வெள்ளம் சூழ்ந்ததால் மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரின் அளவு குறைந்தால் மட்டுமே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.  

கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து அது நிறுத்தப்படுவது இது தான் முதல்முறை. 

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், "மற்ற இடங்களில் இருந்து முற்றிலுமாக தனிமையாக்கப்பட்டுள்ள ஆலுவா நகரத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆலுவாவில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு உதவும் வகையில் மெட்ரோ சேவையை மீண்டும் துவங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அங்கு மோசமான சூழ்நிலை நிலவி வருவதால் அவசர சேவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.