மெட்ரோ ரயில் இயக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அந்த மாநிலம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 39 அணைகளில் 33 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை 73 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆலுவா நகரம் அதிகளவு பாதிக்கப்பட்டு மற்ற இடங்களில் இருந்து தனிமையாக்கப்பட்டது.
கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில்களை இயக்கும் கட்டுப்பாட்டு மையம் ஆலுவா நகரத்தின் அருகே உள்ள முட்டம்யார்ட் பகுதியில் அமைந்துள்ளது. அந்த கட்டுப்பாட்டு மையத்திலும் வியாழக்கிழமை வெள்ளம் சூழ்ந்ததால் மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரின் அளவு குறைந்தால் மட்டுமே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து அது நிறுத்தப்படுவது இது தான் முதல்முறை.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், "மற்ற இடங்களில் இருந்து முற்றிலுமாக தனிமையாக்கப்பட்டுள்ள ஆலுவா நகரத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலுவாவில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு உதவும் வகையில் மெட்ரோ சேவையை மீண்டும் துவங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அங்கு மோசமான சூழ்நிலை நிலவி வருவதால் அவசர சேவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


