நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி மோடி அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மனத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது மோடி அரசின் மீது கடுமையான குற்றசாட்டுகளை வீசிய ராகுல், தனது பேச்சின் முடிவில் அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை கட்டியணைத்தார். பின்னர் ராகுல் இருக்கைக்குத் திரும்பும் பொழுது மோடி அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினார். பின்னர் தனது இருக்கைக்குச் சென்றவர், காங்கிரஸ் எம்.பியான ஜோதிராதித்ய சிந்தியாவைப் பார்த்து கண்ணடித்த காட்சி இந்தியா முழுக்க வைரலாகப் பரவியது.