நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடல் உறுப்புகளை தானம் செய்தார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:26 pm

ANI

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கி கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிக்கை வெளியிட்டார்.

அதில், விபத்தில் அகால மரணம் அடைபவர்களின் உடல் உறுப்புகள் தானம் வழங்குவது தொடர்பாக அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், உடல் உறுப்பு தானம் தொடர்பாக விரைவில் பாடத்திட்டம் ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற கட்டாய உடல் உறுப்பு தானம் வழங்கும் திட்டம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த விழிப்புணர்வு வாரத்தை அடுத்து அதிகளவில் அனைவரும் முன்வந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அம்மாநில அரசின் ஜீவாந்தன் என்ற உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு அமைப்பில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்வந்தனர். இது தில்லியைச் சேர்ந்த இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய நிகழ்வாக அமைந்ததாக அதன் உறுப்பினர் ராகேஷ் வர்மா தெரிவித்தார். 

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.