நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்துக்கு எதிராக கல்வீச்சு: 20 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் சோஃபியான் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:25 pm

ANI

ஜம்மு-காஷ்மீர் சோஃபியான் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் அமைந்துள்ள கில்லோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் தொடர் தேடுதல் வேட்டையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதில் ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட பதிலடியில் கல்வீச்சில் ஈடுபட்ட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.