அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
கடந்த 1951-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்களில் 2.89 பேர் தான் அம்மாநிலத்தில் வசிக்கும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகையாகும். மேலும் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிள்ளதாக கூறப்படுகிறது.