கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராகுல் சந்திப்பு, எய்ம்ஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல், காவலர்களுடன் வாக்குவாதம்: லாலு டிஸ்சார்ஜில் அமளி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:53 pm

Raghavendran

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

Story image

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:

எந்த வசதியும் இல்லாத மருத்துவமனைக்கு என்னை மாற்றியுள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எனது உடல்நலத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. இது ஒரு கடினமான காலம். இருப்பினும் இதை நான் எதிர்கொள்வேன் என்றார்.

Story image

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிராசத் யாதவ் மாற்றப்படும் போது அவர் அங்கிருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மர்ம நபர்கள் எங்கள் நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்றிருந்தது.

Story image

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை நேரில் சென்று லாலு பிராசத் யாதவ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.