தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இதோடு மட்டும்தான் ஆதாரை இணைக்க மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அரசு எதிர்க்கிறது

வங்கி, கேஸ், செல்போன் என எத்தனையோ விஷயங்களுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தினாலும், அதையெல்லாம் விரும்பாத மக்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முழு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

News image
Updated On :27 ஏப்ரல் 2018, 12:25 pm

புது தில்லி: வங்கி, கேஸ், செல்போன் என எத்தனையோ விஷயங்களுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தினாலும், அதையெல்லாம் விரும்பாத மக்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முழு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

தனிநபர் பயன்படுத்தும் செல்போன் எண், வங்கிக் கணக்கு, கேஸ் இணைப்புக்கெல்லாம் ஆதார் இணைப்பை அவசியமாக்கிய மத்திய அரசு, ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான அடையாள அட்டையான வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிக்கு இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை. அவ்வளவு ஏன் அது பற்றி இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசத் தயாராக இல்லை.

அதில் இருந்தே ஜனநாயகத்தை வலிமையாக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது.

இது பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 80 சதவீத வாக்காளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கள்ள ஓட்டு குறையும் என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

இதில் 8 சதவீதம் பேர்தான் இதனை எதிர்த்துள்ளனர். 12 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துள்ளனர்.

2018-19ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ள நிலையில், லோக்கல் சர்க்கல்ஸ் என்ற அமைப்பு, தேர்தல் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. 

முன்னதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், ஆதாரையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் என்றால், இரண்டுமே வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை என்று கருத்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.