தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கட்சிரோலி என்கவுண்டர்: மேலும் 11 நக்ஸலைட்டுகளின் உடல்கள் மீட்பு

மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திராவதி நதியில் இருந்து மேலும் 11 நக்ஸலைட்டுகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:50 pm

IANS


கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திராவதி நதியில் இருந்து மேலும் 11 நக்ஸலைட்டுகளின் உடல்களை பாதுகாப்புப் படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.

நதியில் மிதந்து கொண்டிருந்த இந்த உடல்கள் அழுகும் நிலையில் இருப்பதாகவும், மகாராஷ்டிரா - சட்டீஸ்கர் எல்லைப் பகுதியில் இந்திராவதி நதியில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸலைட் தீவிரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் தப்பியோடினர்.

அவர்களில் பலருக்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்சிரோலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக என்கவுண்டர் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:  கட்சிரோலி மாவட்டம், பாம்ராகாத் தாலுகாவிலுள்ள தாட்கான் வனப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு அதிரடிப்படை போலீஸார் கடந்த சனிக்கிழமை தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இந்நிலையில், போலீஸாருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், 16 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 2 பேர் அந்த இயக்கத்தில் மாவட்ட அளவிலான தளபதிகளாக செயல்பட்டு வந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த 38 ஆண்டுகளாக நக்ஸலைட்டுகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில், இந்த சம்பவம் போலீஸாருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.