ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்: தில்லி போலீஸ் அசத்தல்

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி காவல்துறையினர் பரிசோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

News image
Updated On :23 ஏப்ரல் 2018, 9:20 am


புது தில்லி: காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி காவல்துறையினர் பரிசோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

இந்த முகத்தை அடையாளம் காணும் (facial recognition system - FRS) தொழில்நுட்பத்தை பரிசோதனை முறையில் செயல்படுத்தி 4 நாட்களில் காணாமல் போன சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை சோதனை முறையில் தில்லி காவல்துறையினர் செயல்படுத்தினர். அந்த வகையில் பல்வேறு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 45 ஆயிரம் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்து ஆராய்ந்ததன் மூலம் ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும் 2,930 குழந்தைகளின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அது தொடர்பான மென்பொருள் நிபுணர்களின் உதவியோடு தில்லி காவல்துறை இப்பணியில் ஈடுபட்டது.

இந்தியாவில் நாள்தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இதுபோன்றதொரு தொழில்நுட்பம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.