நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்: எடியூரப்பா உறுதி

கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:48 pm

Raghavendran

கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 225 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, ஷிமோகாவில் உள்ள ஷிகரிபூரா என்னும் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர் பேசியதவாது:

நான் எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளேன். இம்முறை 30 முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். ஏனெனில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவும் பாஜக-வுக்கு உள்ளது. லிங்காயத்து மற்றும் விஷ்வேஷ்வரா ஆகியோரை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு லண்டனில் பிரதமர் நரேந்திர மோடி தக்க பதிலடி அளித்துள்ளார் என்றார்.

முன்னதாக, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் லிங்காயத்து தனி மதமாக அறிவிக்கப்பட்டு அதை சிறுபான்மையினர் பகுதியில் இணைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.