ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அதிகரிக்கும் வங்கி ஊழல்கள்: ரிசர்வ் வங்கி ஆளுநரை விசாரிக்க பாராளுமன்ற குழு முடிவு! 

அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2018, 12:29 pm

புதுதில்லி: அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கான அளவில் பண முறைகேடு நடப்பது தொடர்கதையாகி விட்டது. பி.என்.பி வங்கி மற்றும் தற்பொழுது ஐசிஐசிஐ என இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் தான் அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி  தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு கூட்டம் கூடி, செவ்வாயன்று நிதித்துறை செயலர் ராஜிவ் குமாரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அது தொடர்பாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு முன்பு வரும் மே  17 அன்று ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் வங்கி ஊழல்கள் தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பவுள்தாகத் தெரிகிறது.

அத்துடன் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு என்ன விதமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.