புதுதில்லி: அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கான அளவில் பண முறைகேடு நடப்பது தொடர்கதையாகி விட்டது. பி.என்.பி வங்கி மற்றும் தற்பொழுது ஐசிஐசிஐ என இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் தான் அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு கூட்டம் கூடி, செவ்வாயன்று நிதித்துறை செயலர் ராஜிவ் குமாரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அது தொடர்பாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு முன்பு வரும் மே 17 அன்று ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் வங்கி ஊழல்கள் தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பவுள்தாகத் தெரிகிறது.
அத்துடன் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு என்ன விதமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

மாணவா்கள் ஆபத்தான நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும்: கல்வித் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

