நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மோடி அரசு வங்கி அமைப்பை சீரழித்தது தான் பணத் தட்டுப்பாட்டுக்கு காரணம்: ராகுல் விமரிசனம்

நாட்டின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணத்தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடி வங்கி அமைப்பை சீரழித்தது தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:46 pm

Raghavendran

நாட்டின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணத்தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடி வங்கி அமைப்பை சீரழித்தது தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்து கூறுகையில், நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன். வங்கிகளிலும் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் கையிருப்பில் இருக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அதிக அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், இவ்விவகாரம் தொடர்பாக கூறியதாவது:

நாட்டின் வங்கி அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துவிட்டார். அதுதான் இந்த திடீர் பணத்தட்டுப்பாட்டுக்கு மிக முக்கிய காரணமாகும். முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் நாம் தான் வங்கி வாயில்களில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டோம். மாறாக அவற்றை நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலான அரசமைப்பு தான் தற்போது நம்மிடம் உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.