நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் பாரதிய ஜனதா கட்சி: காங்கிரஸ் கடும் தாக்கு! 

பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:46 pm

IANS

புதுதில்லி: பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இனி தொலைக்காட்சிகளுக்கான செட் டாப் பாக்சுகளில் 'சிப்புகள்' பொருத்துவது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை திட்டம் ஒன்றை உருவாக்கி, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்துள்ளதாக ஞாயிறன்று தகவல்கள் வெளியானது. இது உடனே பரவலான விமர்சனத்தினைச் சந்தித்தது.

அத்துடன் இப்படி சேகரிக்கப்படும் தகவல்களின் வழியாக எந்த சேனல்கள் எத்தனை நேரம் பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் வழியாக விளமபரதாரர்கள் சரியான வழியில் செலவழிக்க முடியும்.  அத்துடன் அதிகமாக பார்க்கப்படும் சேனல்கள் மட்டுமே ப்ரொமோட் செய்யப்படும்.

இந்நிலையில் இதுதொடர்பாக  பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பாரதிய ஜனதா கட்சி செய்து வரும் கண்காணிப்பின் அடுத்த நிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மீதான கடுமையான அந்தரங்க உரிமை மீறலாக,  உங்களது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை, உங்ககளது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் விரும்புகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.