வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மசூதி குண்டு வெடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் விடுதலை! 

2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:46 pm

IANS

ஹைதராபாத்: 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினாருக்கு அருகிலுள்ளது மக்கா மஸ்ஜித் மசூதி. இந்த மசூதியில் கடந்த 18.07.07 - வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடந்து கொண்டிருக்கும் பொழுது பலத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மசூதியை தரை மட்டமாக்கிய இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் மரணமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்புக்குப் பின்னர் மசூதிக்கு வெளியே நிகழ்ந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். பின்னர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை தேசிய விசாரணை ஆணையம் விசாரித்து வந்தது.

அவர்களது விசாரணையில் குண்டு வெடிப்பினைத் திட்டமிட்டதாக  வலதுசாரி சித்தாந்த ஆதரவாளர்களான சாமியார் அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, பரத்பாய் மற்றும் ரஜேந்தர் சவுத்ரி ஆகிய ஐவரை விசாரணை ஆணையம் கைது செய்தது. பின்னர் அவர்கள் மீது நல்லம்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உள்ள தேசிய விசாரணை ஆணைய சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் மீதான தீர்ப்பு திங்களன்று காலை வழங்கப்பட்டது. இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டதாக அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.