ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்': பாலியல் வழக்குகளில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி! 

'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2018, 12:44 pm

புதுதில்லி: 'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது 

அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  பாஜக எம்.எல். ஏ குல்தீப் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்நிலையில் 'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமர் அவர்களே, உங்களது மவுனம் ஏற்றுக் கொள்ள முடியாதது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ஏன் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவர்களும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மாநில அரசுகளால் பாதுகாக்கப்படுகிறாரகள்? இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.