வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு: பாஜக எம்.எல்.ஏவை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு! 

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாஜக எம்.எல். ஏ குல்தீப் சிங்கை கைது செய்ய சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

IANS

லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை கைது செய்ய சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவ் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும், அவரது உதவியாளர்களும் கடந்த ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, 18 வயது இளம்பெண் ஒருவர் லக்னௌவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லம் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றார். அந்த முயற்சியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, 'பாஜக எம்எல்ஏ குல்தீப், அவரது உதவியாளர்களுக்கு எதிராக உன்னாவ் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தனது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்' அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, அந்த எம்எல்ஏவின் சகோதரரை தாக்கியதாக கூறி, இளம்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண்ணின் புகார் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, தனது அறிக்கையை மாநில அரசிடம் புதன்கிழமை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அத்துடன் அலஹாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கர் மீது தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.   

அதன்பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் (போஸ்கோ) பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கு சிபிஐ வசம் வியாழன் அன்று ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குல்தீப் சிங் செங்கர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் 363 (ஆள் கடத்தல்), 366 (பெண் கடத்தல்), 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் அச்சுறுத்தல்), மூன்று வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், வெள்ளியன்று  காலை அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அத்துடன் உன்னாவ் நகரத்தில் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அந்த இளம்பெண்ணிடமும் அதிகாரிகள் விசாரனை நடத்தினர்.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை கைது செய்யுமாறு சிபிஐக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி போஸ்லே மற்றும் நீதிபதி அனித் குமார் அடங்கிய அமர்வானது பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாஜக எம்.எல்.வை குல்தீப் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும்,  வரும் மே  2-ஆம் தேதி விரிவான விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யவும் சிபிஐக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.