வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை: மத்திய அரசு பரிசீலனை! 

பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக ...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

IANS

புதுதில்லி: பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது 

இந்நிலையில் பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் கூறியுள்ளதாவது:

கத்வா சம்பவத்தினால் மிகவும் வருத்தத்தில் உள்ளேன். அது மட்டுமல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வதாக பதிவாகும் வழக்குகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. எனவே ஏற்கனவே குழநதைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு நடைமுறையிலிருக்கும் "போஸ்கோ" சட்டத்தில் திருத்தம் செய்து, பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர நானும் எனது அமைச்சகமும் பரிசீலனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.     

இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழநதைகள் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பேசும்பொழுது, 'இதுபற்றிய சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது நிறைவடைந்ததும்  சட்டத்துறைக்கு அனுப்பப்படும். தற்பொழுது நாடாளுமன்றம் செயல்படாததால், அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு யோசித்து வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும்' என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.