நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

சீனா, மங்கோலியா நாடுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பயணம்

சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

Raghavendran

சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதி சீனா, 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இதில் 2017-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுநேர பிரதிநிதியாக இணைந்துள்ளது. 

பின்னர் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ உடன் சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளின் உறவு குறித்து கலந்துரையாடுகிறார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்லாம் பிரச்னை கடந்த 1 வருடமாக நீடித்து வரும் நிலையில், இவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.