நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

எரிசக்தி துறையில் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:43 pm

Raghavendran

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

16-ஆவது சர்வதேச எரிசக்தி கருத்தரங்க கூட்டம் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை இந்திய அரசு கடந்த 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது நடத்துகிறது. சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் துணை நின்றன. 

இந்த கூட்டத்தில் மொத்தம் 92 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவற்றில் 72 நாடுகள் சர்வதேச எரிசக்தி கருத்தரங்கத்தில் அங்கம் வகிப்பவை. மீதமுள்ள 20 நாடுகள் இந்த கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச அளவிலான எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் தயாரிப்பு (மேக் இன் இந்தியா) திட்டத்தின் அடிப்படையில் ஜவுளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பொறியியல் துறைகளின் தொழிற்சாலைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு அனைத்து விதங்களிலும் ஊக்கமளித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி துறையில் எனது எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் எரிசக்தியில் எளிய அணுகுமுறை, எரிசக்தி ஆற்றல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தியின் நீண்டகால தாக்குபிடிப்புத் தன்மை உள்ளிட்டவைகளை இதன் நான்கு தூண்களாக கருதுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.