வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாஜக., எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை மர்ம மரணம்! 

உத்தரப்பிரதேசத்தில் பாஜக.,எம்.எல்.ஏ ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:42 pm

IANS

லக்னௌ:   உத்தரப்பிரதேசத்தில் பாஜக.,எம்.எல்.ஏ ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் தனது புகாரின் மீது காவல்துறை நடடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த பெண் ஞாயிறன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டனர்.

அத்துடன் அன்று மாலையே அந்தப் பெண்ணின் தந்தை சுரேந்திர சிங் என்பவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எம்.எல்.ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள் நால்வர் போலீசாருடன் இணைந்து, சுரேந்திர சிங்கை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த பொழுதும்  ஞாயிறு நள்ளிரவு வரை அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. பின்னர் ஒரு வழியாக அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கடுமையான வயிற்று வலியுடனும், வாந்தி மயக்கத்துடனும் அழைத்து வரப்பட்டதாக அங்கிருந்த மருத்துவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கள் அன்று காலை சுரேந்திர சிங் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த மரணம் தொடர்பாக காவல் நிலைய அலுவலர் மகி உட்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புஷ்பாஞ்சாலி தேவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், மாவட்ட துணை நீதிபதி மனிஷ் பன்சால் இந்த மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவார் என்று காவல்துறை ஐ,ஜி பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.