நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள்: வெங்கய்ய நாயுடு ஆவேசம்

மாநிலங்களவையை தொடர்நது முடக்கி நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள் என்று வெங்கய்ய நாயுடு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

Raghavendran

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பல்வேறு காரணங்களுக்காக எதிர்கட்சிகளால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ், சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இதனால் எவ்வித விவாதங்களும் இன்றி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இதர செயல் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலுக்கு உள்ளானது. அதிலும், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்கம்போல் தெலுங்கு தேசம் (ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து), அதிமுக (காவிரி மேலாண்மை வாரியம்), காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் (எஸ்.சி, எஸ்.டி சட்ட திருத்தம்) உள்ளிட்ட காரணங்களுக்காக புதன்கிழமை மாநிலங்களவையில் போராட்டம் நடத்தின. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நாட்டுக்கான முன்னேற்ற திட்டங்களை அமல்படுத்த உதவுங்கள். உங்கள் விவகாரங்களை அவையில் விவாதிக்கலாம். அதுபோல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளியுங்கள். இதுவரை எவ்வித நலத்திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. நீங்கள் நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள். அவர்களுக்கு இங்கு நடப்பது அனைத்தும் நன்கு தெரியும். இது அவர்களை கோபப்படுத்தியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.