நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

எங்களைப் போல அம்பேத்கரை கௌரவித்தவர்கள் வேறு யாரும் இல்லை: மோடி

பி.ஆர். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை சாடும் வகையில், எங்களைப் போல அம்பேத்கரை கௌரவித்தவர்கள் வேறு யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

PTI

புது தில்லி: பி.ஆர். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை சாடும் வகையில், எங்களைப் போல அம்பேத்கரை கௌரவித்தவர்கள் வேறு யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

அலிப்புர் சாலையில், அம்பேத்கர் வாழ்ந்து உயிர் நீத்த அந்த இல்லம், அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 13ம் தேதியன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோடி, பல்வேறு கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக அம்பேத்கரின் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள். 

ஆனால், அவரது கனவுகளை நனவாக்கியது பாஜக அரசுதான். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அம்பேத்கர் சர்வதேச மையம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், அடுத்து வந்த காங்கிரஸ் அதனை காலில் போட்டு நசுக்கியது. மீண்டும் பாஜக ஆட்சி வந்ததும், அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.

அம்பேத்கரின் முக்கியக் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவையே பிரதானம். அதே கொள்கைகளுடன் எளிய மக்களின் நலனுக்காகவே பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது என்றும் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.