ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

செல்ஃபி விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் எவை? மாநிலங்களிடம் பட்டியல் கேட்கும் மத்திய அரசு

சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நடந்த பகுதிகள் எவை எவை என்று பட்டியல் தருமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 12:21 pm


புது தில்லி: சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நடந்த பகுதிகள் எவை எவை என்று பட்டியல் தருமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நேரிட்டதை அடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், செல்ஃபி எடுக்கும் போது அதிக விபத்துகள் நேரிடும் பகுதியை 'நோ செல்ஃபி ஸோன்' (சுய படம் எடுக்கக் கூடாத பகுதிகள்) என்று அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், செல்ஃபி எடுக்கும் போது விபத்து நடக்கும் பகுதிகளில், அபாயப் பலகை அல்லது அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறும், பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மாநில  அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.