ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இராக்கில் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா வந்தது: உறவினர்களிடம் ஒப்படைப்பு

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 39 பேரில் 38 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானத்தில் இன்று அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்டது.

News image
Updated On :2 ஏப்ரல் 2018, 10:28 am


புது தில்லி: இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 39 பேரில் 38 இந்தியர்களின் உடல்கள் சிறப்பு விமானத்தில் இன்று அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்டது.

பாக்தாத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிறப்பு விமானம் இன்று பகல் 2.30 மணியளவில் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இராக்கில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர். 

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களில், ஒருவரது உடல் அடையாளம் காணப்படாததால், 38 பேரின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. சிங் நேற்று இராக் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து 38 இந்தியர்களின் உடல்கள் இன்று சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது.

பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்கள் அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இணை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவும் உடன் இருந்தார்.

பிறகு அந்த சிறப்பு விமானம் பாட்னா மற்றும் கொல்கத்தாவுக்குச் சென்று உறவினர்களிடம் இந்தியர்களின் உடல்களை ஒப்படைக்க உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.