தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது அத்துமீறி

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 3:49 am

அர்னியா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

"பாகிஸ்தான் படையின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படை கடுமையான முறையில் பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை 6.45 வரை நீடித்தது' இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்னியா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள சோதனைச்சாவடியில் பிஎஸ்எஃப் வீரர் விஜேந்தர் பகதூர் வியாழக்கிழமை நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 12.20 மணியளவில் பாகிஸ்தான் எல்லை காப்புப் படையினர் அத்துமீறி நடத்திய சிறிய ரக துப்பாக்கிகளால் சுட்டதோடு, ராக்கெட் குண்டுகளையும் வீசினர்.

இதில், விஜேந்தர் பகதூரின் வயிற்றுப்பகுதியில் தோட்டா பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுவம் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்படும் போர்நிறுத்த மீறல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் 285 முறை அத்துமீறித் தாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் 228 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.