வாரணாசி: இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக, உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியில் சிறந்து விளங்கிய ராணுவ படை பிரிவுகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சகமும், இந்திய ராணுவமும், எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்தும் மக்களை காப்பாற்றுவதற்கு போதுமானதாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் காஷ்மீர், டோக்லாம் பீடபூமி உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், நமது வீரர்களும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே, பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழலாம் என்று கூறினார்.
பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்நிறுத்த மீறல் குறித்து அமைச்சகம் கவனமாக கண்காணித்து வருகிற நேரத்தில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக நான் துல்லியமாக பேசமாட்டேன், ஆனால், நாங்களும் மற்றும் உள்துறை அமைச்சகமும் போர் நிறுத்த மீறல்களை மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்றார்.
மேலும், “இந்திய எல்லைகள் பாதுகாப்புடன் இருக்கின்றன, இந்திய நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றறு கூறிய சீதாராமன் எந்தவித பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ள நமது இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது”, என்று தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், ராணுவத்தின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்திவருகிறார். “தினமும் காலையில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”, என பாதுகாப்புத் துறை அமைச்சகம். தொடக்கத்திலேயே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


